என்னுடைய உணர்வுகளில் ஊறிப்போன ஒரு பெயர் தான் பாரதியார். தமிழின் கவிதை மற்றும் உரை நடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். சமூகம், நாடு, மக்கள் என பரந்துபட்ட அளவில் தூர நோக்கோடு கருத்துக்களை கூறிச்சென்ற அறிஞர். பாரதியின் பாடல்கள், கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகள் தட்டி எழுப்பப்பட்டு புதுவித உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு வேறு யாருடைய எழுத்துக்களிலும் கிடைத்ததில்லை. ஒவ்வொரு எழுத்துக்களின் ஆழத்திற்கும் சென்று அதனை உணர்ந்து படித்தவர்கள் இதே அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.
பாரதியின் பாடல்கள் இலக்கியக் கருத்துக்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் வாழ்க்கையையும், அதில் மனிதவர்க்கம் முழுவதும் உயர்நிலை அடைந்து வாழ்வதையும், அதற்காக எதிர்பார்க்கும் மாற்றங்களையும் பெரும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றார் என்பதனை தெளிவாக காண முடியும். பாரதியின் எழுத்துக்களை ஆழமாக சிலாகிக்கும் அளவிற்கு இலக்கிய அறிவு இல்லை என்றாலும் நான் ரசித்தவற்றில் ஒரு சிலவற்றை இங்கு பகிந்து கொள்கிறேன்.
"மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்" சொர்க்கம் இந்த பூமியில் தோன்ற வேண்டும் என்பார்.
தமிழைப் பற்றி பாரதி கூறியவற்றில் சில
"தமிழ், தமிழ், தமிழ் என்றும் எப்பொதும் தமிழை வளர்ப்பதையே கடமையாக கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும். தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொது எனக்கு வருத்தமுண்டாகிறது" என்கிறார்.
அதே வேளை பாரதி தமிழ் மொழி பற்றி சில கடுமையான கருத்துக்களையும் கூட வெளியிட்டிருப்பார். ஆனால் அவற்றை யாரும் சிலாகித்து பேசியது குறைவே. "தமிழில் எழுத்துக்குறை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும், "தமிழ்ப் பாசைக்கு உள்ள குறைகள்" என்ற தலைப்பில் இன்னுமொரு உரையாடல் கட்டுரையையும் அவர் எழுதி இருப்பார்.
"உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதி பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து சௌகர்யப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்" என்று கூறுவார்.
அவர் தனது பாடல்களில் மொழியை கையாளும் லாவகம் அழகானது. "காணி நிலம் வேண்டும் பராசக்தி" பாடலில்
"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேண்டும்" என்பார். கத்துவது என்றால் கூவி அழைப்பது என்று பொருள். தூரத்தில் இருப்பவர்களை அழைப்பதற்கான சொல் கத்துவது தான். கத்தி குயில் தன் காதலை அழைக்கும் சத்தம் தன் காதில் பட வேண்டும் என்கிறார் .
அதே போல "பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்" தன் மீது மட்டுமே தணியாத காதல் கொண்ட இணக்கமான பெண். இருவரும் ஒரே ரசனையில் ஓர் உணர்வில் கூடும் போது தான் பாட்டுக் கலந்திட முடியும்.
"கூட்டுக்களியினிலே கவிதைகள் கொண்டுதர வேணும்" ஒத்துப் போனவர்களின் இன்ப விளையாட்டு அது தரும் பல்லாயிரம் கவிதைகளை.
"பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்" இந்த உலகத்தையே சுபீட்சமாக்கும் எழுத்துக்களை நான் வழங்க வேண்டும் என்கிறார்.
கண்ணம்மாவின் காதல் என்ற பாடலில்
"கற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும் - நிலா
ஊறித் ததும்பும் விழிகளும்...."
என்று ஆரம்பிக்கும் பாரதி மூச்சு விடும் இடைவெளி நேரத்தில் கூட உன் மீதான காதலை எண்ணி இன்பம் கொள்கிறேன் என்கிறார். அமுது ஊறுகின்ற இதழ்கள் - இதழ் சுவை இனிதானது. இதைப் பாடாத கவிஞர்களே இல்லை. நிலா ஊறித் ததும்பும் விழிகள் - கண்ணம்மாவின் விழிகள் காருண்யம் மிக்கவை. அதில் அன்பு மிகுதியால் நீர் பளபளத்துக் கொண்டே இருக்கும். பார்க்கும் போதே அவளுள் ஒன்றிட வைக்கும் விழிகள் என்று சொல்கிறார்.
அதே பாடலில் "நீ எனது இன்னுயிர் கண்ணம்மா.." என்கிறார் பாரதி. அதுவும் இன்னுயிர் என்கிறார். அமுது ஊறும் வரிகள். காதலின் உச்சத்தில் கவிஞன் வார்த்தைக்கு தவித்து உயிரை விட மேலான ஒன்று இருக்க முடியாததால் கண்ணம்மாவை தன் உயிராக்கி விடுகிறார்.
கடைசி வரிகளில் பாரதி "உயிர்த் தீயினிலே வளர் சோதியே.." என்று காதலின் உன்மத்த நிலையை வர்ணிக்கின்றார்.
"உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதி பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து சௌகர்யப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்" என்று கூறுவார்.
அவர் தனது பாடல்களில் மொழியை கையாளும் லாவகம் அழகானது. "காணி நிலம் வேண்டும் பராசக்தி" பாடலில்
"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேண்டும்" என்பார். கத்துவது என்றால் கூவி அழைப்பது என்று பொருள். தூரத்தில் இருப்பவர்களை அழைப்பதற்கான சொல் கத்துவது தான். கத்தி குயில் தன் காதலை அழைக்கும் சத்தம் தன் காதில் பட வேண்டும் என்கிறார் .
அதே போல "பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்" தன் மீது மட்டுமே தணியாத காதல் கொண்ட இணக்கமான பெண். இருவரும் ஒரே ரசனையில் ஓர் உணர்வில் கூடும் போது தான் பாட்டுக் கலந்திட முடியும்.
"கூட்டுக்களியினிலே கவிதைகள் கொண்டுதர வேணும்" ஒத்துப் போனவர்களின் இன்ப விளையாட்டு அது தரும் பல்லாயிரம் கவிதைகளை.
"பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்" இந்த உலகத்தையே சுபீட்சமாக்கும் எழுத்துக்களை நான் வழங்க வேண்டும் என்கிறார்.
கண்ணம்மாவின் காதல் என்ற பாடலில்
"கற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும் - நிலா
ஊறித் ததும்பும் விழிகளும்...."
என்று ஆரம்பிக்கும் பாரதி மூச்சு விடும் இடைவெளி நேரத்தில் கூட உன் மீதான காதலை எண்ணி இன்பம் கொள்கிறேன் என்கிறார். அமுது ஊறுகின்ற இதழ்கள் - இதழ் சுவை இனிதானது. இதைப் பாடாத கவிஞர்களே இல்லை. நிலா ஊறித் ததும்பும் விழிகள் - கண்ணம்மாவின் விழிகள் காருண்யம் மிக்கவை. அதில் அன்பு மிகுதியால் நீர் பளபளத்துக் கொண்டே இருக்கும். பார்க்கும் போதே அவளுள் ஒன்றிட வைக்கும் விழிகள் என்று சொல்கிறார்.
அதே பாடலில் "நீ எனது இன்னுயிர் கண்ணம்மா.." என்கிறார் பாரதி. அதுவும் இன்னுயிர் என்கிறார். அமுது ஊறும் வரிகள். காதலின் உச்சத்தில் கவிஞன் வார்த்தைக்கு தவித்து உயிரை விட மேலான ஒன்று இருக்க முடியாததால் கண்ணம்மாவை தன் உயிராக்கி விடுகிறார்.
கடைசி வரிகளில் பாரதி "உயிர்த் தீயினிலே வளர் சோதியே.." என்று காதலின் உன்மத்த நிலையை வர்ணிக்கின்றார்.
அதே போல பாரதி பாடிய சக்திப் பாடல்கள் காலத்தால் அழியாதவை. சக்தியின் புகழை, பெருமையைப் பேசுபவை. "மூன்று காதல்" என்ற தலைப்பின் கீழே
"வெள்ளை மலரணை மேல்-அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் - கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத்தேன், அம்மா"
எனத் தொடங்கும் ஒரு பாடலைப் பாடியிருக்கின்றார் பாரதியார். முதலாவது சரஸ்வதி காதல், இரண்டாவது பாடல் லக்ஷ்மி காதல், மூன்றாவது காளி காதலையும் குறிக்கின்றது. இந்த மூன்று விதமான காதல் பாட்டுக்களையும் ஆழமாக நோக்கினால் பாரதியின் வாழ்வு எப்படிப் பண்பட்டு எதிலே போய் முடிகின்றது என்பதை காண முடியும்.
"கண்ணம்மா என் காதலி" என்ற பாடல்களில் பண்டைய தமிழிலக்கிய அகத்துறை மரபு சார்ந்ததாக காட்சி வியப்பு, பின்னே வந்து கண் மறைத்தல், முகத்திரை களைதல், நானிக்கன் புதைத்தல், குறிப்பிடம் தவறியது, யோகம் என்னும் தலைப்புக்களில் பாடல்களை அமைத்திருக்கின்றார்.
கண்ணன் பாட்டுக்களில் கண்ணனை காதலனாக உருவகித்து பாடும் பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அற்புதமானவையாக இருக்கும்.
அதில்
"தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப்போல்..." எனத் தொடங்கும் பாடலில் காதல் வயப்படிருக்கும் பெண் தனது உணர்வுகளை தோழிக்கு உரைப்பது போல வரிகள் அனைத்தும் அருமையாக அமைந்திருக்கும். எப்போது படித்தாலும் உதட்டில் மென் புன்னகையை வரவழைப்பவை அவை.
No comments:
Post a Comment